Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... காரமடையில் ராமர் அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா காரமடையில் ராமர் அவதாரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 30ல் நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 30ல் நடை திறப்பு!

பதிவு செய்த நாள்

28 டிச
2015
11:12

சபரிமலை:  சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. இனி மகரவிளக்கு  பூஜைகளுக்காக 30 -ம் தேதி மாலை திறக்கும். ஜன.,18 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல  காலம் கடந்த நவ., 17-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று நேற்று நிறைவாக  மண்டல பூஜை நடைபெற்றது. இந்த நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி  கடந்த 26-ம் தேதி மாலை சன்னிதானம் வந்தது. தொடர்ந்து அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

நேற்று நிறைவு நிகழ்ச்சியாக மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் 3.15 மணிக்கு  தொடங்கிய நெய்யபிஷேகம் 9.45 மணிக்கு நிறைவு பெற்றது. அதன் பின்னர் மண்டலபூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. கோயில்  முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கலசபூஜை நடத்தி, பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டது.  தொடர்ந்து அந்த கலசத்தை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி எடுக்க, மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி பவனி வந்தது. பின்னர்  ஸ்ரீகோயிலுக்குள் கொண்டு சென்று ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். மாலையில் நான்கு மணிக்கு நடை திறந்து இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள்  பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மகரவிளக்குக்கான ஏற்பாடுகள் இனி வரும் மூன்று நாட்கள்  நடைபெறும்.

நடை திறப்பு: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக மீண்டும் 30-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு திறக்கும். அன்று வேறு பூஜைகள் எதுவும்  கிடையாது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். 31-ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து 3.15 மணிக்கு  நெய்யபிஷேகம் தொடங்கும். ஜன., 15-ம் தேதி மகரஜோதி விழா நடக்கிறது. 18-ம் தேதி காலை 11மணி வரை நெய்யபிஷேகம்  நடைபெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது. 19-ம் தேதி மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும்.  20-ம் தேதி காலை ஏழு மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar