காரமடையில் ராமர் அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2015 11:12
மேட்டுப்பாளையம்: காரமடையில் ராமர் அவதார அலங்காரத்தில் பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. ஆறாம் நாள் இரவு ராமர் அவதார அலங்காரத்தில் பெருமாள், கோவிலின் உள்பிரகாரத்தில் இரவு சுவாமி வலம் வந்து, சொர்க்க வாசல் முன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின், சொர்க்க வாசல் திறந்ததும், ராமர் அவதார பெருமாள், திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோவில் இளைப்பாறு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பாசுரங்களை சேவித்தனர். சகஸ்ரநாமம் சிறப்பு அர்ச்சனை நடந்தது.