பதிவு செய்த நாள்
28
டிச
2015
11:12
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்த தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் 42 வது ஆராதனை விழா நடந்தது. ஆராதனை விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. விழாவில், தினசரி பாதபூஜை, ஹோமம், பாராயணம், அகண்டதாரா நாம ஜபம், பரனுார் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 1:30 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.