Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று முதல் தமிழக கோயில்களில் ... மேல்மலையனூர் கோவிலில் ரூ.22 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கோவிலில் விபூதி பிரசாதம் கிடைக்காமல் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், விபூதி, குங்குமம் பிரசாதம் பாக்கெட் செய்வதற்காக, 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இயந்திரம் பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் பிரசாதம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். பவுர்ணமி, தீபத்திருவிழா போன்ற விசேஷ தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, விபூதி, குங்குமம் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதில்லை. இதனால் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள், பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இதற்காக போராட்டமும் நடத்தினர். இதையடுத்து, கடந்த, 2010ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், விபூதி, குங்குமம் பாக்கெட் செய்யும் இயந்திரம் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரசாதம் பாக்கெட் செய்யப்பட்டு, தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு, கிளிகோபுர வாயிலில் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இது, ஆறு மாதங்கள் வரை மட்டுமே நடைமுறையில் இருந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்குவதை கோவில் நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதற்காக வாங்கப்பட்ட இயந்திரமும் பயன்பாடில்லாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், 10 ரூபாயை கோவில் குருக்களுக்கு அர்சசனை தட்டில் செலுத்தினால் மட்டுமே, விபூதி, குங்குமம் பிரசாதம் தருகின்றனர். மற்றவர்களுக்கு நெற்றியில் இட்டுக் கொள்ள சிறிது மட்டும் வழங்கிவிட்டு அனுப்பி விடுகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீட்டிற்கு பிரசாதம் எடுத்துச் செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே, பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு, மீண்டும், விபூதி, குங்குமம் பிரசாதம் பாக்கெட் செய்யும் இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar