பதிவு செய்த நாள்
01
ஜன
2016
05:01
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குல தெய்வம் உட்பட முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. 2016 ஆங்கில புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி விநாயகர், வைரவன்பட்டி பைரவர், திருப்புவனம் புஷ்பனேஸ்வரர், காளை யார்கோவில் சொர்ண காளீஸ்வரர், திருப்புத்துõர் திருத்தளி நாதர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் , பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி, தேவகோட்டை நகர சிவன்கோவில்,அரியக்குடி திருவேங்கட முடையான், குன்றக்குடி சண்முகநாத பெருமான், காரைக்குடி கொப்புடையம்மன், முத்துமாரியம்மன், இடைய மேலுõர் வரத முனீஸ்வரர்,சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார், பிரான்மலை, கோவிலுõர் குற்றாலஸ்வரர், மானாமதுரை ஆனந்தவள்ளி, தாயமங்கலம் முத்துமாரியம்மன், சிவகங்கை நகரில் சிவன்கோவில், சுந்தரராஜபெருமாள், பிள்ளைவயல் காளியம்மன், கவுரி விநாயகர், விஷ்ணு துர்கா, வீரமாகாளியம்மன் கோவில் உட்பட முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர். குன்றக்குடி, பிளாளையார்பட்டி போன்ற சில கோவில்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி வழிபட்டனர். இம்மாவட்டத் திலுள்ள குல தெய்வ கோவில் களிலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். இடைக்காட்டூர் உட்பட முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதலே கூட்டம் காணப்பட்டது.