பதிவு செய்த நாள்
02
ஜன
2016
02:01
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்தியபடி பூஜை, விஸ்வரூப தரிசனமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, இரவு 9:30 மணிக்கு, ஏகாந்த சேவை நடந்தது.