காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதசுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகை நடந்தது.
காரைக்கால் அடுத்த தலத்தெருவில் உள்ள சிவலோகநாத சுவாமி கோவிலில் பொங்கலை முன்னிட்டு சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தீப்பாச்சி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து அம்மன், மகேஸ் வரி, கவுமாரி, வைஷ்ணவி, சாமுண்டி சுவாமிகளுக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.