Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்மி, தெம்மாங்குடன்பூ எருவாட்டி ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரத்திற்கு பார்வேட்டை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் பெருமாள் சிலையில் திடீர் விரிசல்:இரவோடு இரவாக பரிகார யாகம்!
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் பெருமாள் சிலையில் திடீர் விரிசல்:இரவோடு இரவாக பரிகார யாகம்!

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
11:01

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உற்சவ சிலையின் கால் பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் இரவோடு இரவாக பரிகார யாகம் நடத்தப்பட்டது. புது சிலை செய்ய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் தை 2ம் நாள், மதுரை அனுப்பானடியில் நடக்கும் பாரி வேட்டை நிகழ்ச்சிக்காக கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ சிலை எடுத்து வரப்படும். நேற்றுமுன்தினம் இரவு சுவாமி பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக குதிரை வாகனத்தில் சிலையை வைத்தபோது, திடீரென சரிந்தது. கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிலையை கோயில் நிர்வாக அதிகாரி அனிதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கால் பகுதியில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஜீயர் ஒருவரிடம் அதிகாரிகள் ஆலோசித்தனர். சிலை சேதமடைந்தால் உடனடியாக உற்சவ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, கோயிலுக்கு எடுத்துச் சென்று பரிகார யாகம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து, கோயிலுக்கு இரவோடு இரவாக சிலை எடுத்துச்செல்லப்பட்டு பரிகார யாகம் நடத்தப்பட்டது. மீண்டும் தங்கள் ஊருக்கு சுவாமி சிலை எடுத்துவரப்பட வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் அனுப்பானடி மக்கள் வலியுறுத்தினர். சிலையின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: ஐம்பொன்னலான உற்சவ சிலை 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதனால் அதன் உறுதிதன்மை குறைந்து விரிசல் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறோம். புதுச்சிலை செய்ய திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் சிலை செய்யப்படும். அதுவரை சிலையின் பாதுகாப்பு கருதி, உற்சவ நிகழ்ச்சிகளில் வேறு சிலையை பயன்படுத்துவதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar