ராமேஸ்வரம் கோயில் விமானங்கள் கும்பாபிஷேகத்திற்கு தயார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2016 12:01
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பஞ்சமூர்த்திகள் விமானங்கள் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை(20ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பலாலய பூஜைகளுக்கு பின் வர்ணம் பூசும் பணி நடந்தது. சுவாமி, அம்மன் சன்னதி, 4 ராஜகோபுரங்கள், மங்கள கோபுரம், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட 22 சன்னதிகளின் விமானங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. இவை மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் மேல் தளத்தில் 4500 பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை தரிசிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.