ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று.. தங்க விமான கும்பாபிஷேகம்: பலத்த பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2016 09:01
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேகம் இன்று நடப்பதை யொட்டி பக்தர்கள் வருகையால் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதன் பாதுகாப்பு பணியில் டி. ஐ.ஜி., தலைமையில் 1400 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை 10.05 மணிக்குமேல் 11 மணிக்குள் கோயில் தங்கவிமானம், ராஜகோபுரம், கருடாழ்வார் மற்றும் பரிவாரங்களுக்கு பத்ரிநாராயணபட்டர் தலைமையில் பட்டாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். இதை தொடர்ந்து சிங்கம்மாள் குறடு மண்டபம், ஆண்டாள்கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் தங்கநிற தகடுகள் பதிக்கப்பட்டு பொன்னிறத்தில் ஜொலிக்கிறது. கோயிலின் மேல்பகுதி செல்ல, வடக்குமாடவீதி, தெற்கு மாடவீதிகளில் தற்காலிக மாடிபடிகள் அமைக்கபட்டு, 4 ஆயிரம்பேர் கும்பாபிஷேகத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. முக்கிய வி.ஐ.பி.,க்கள் கோயிலின் உட்புறமாக மேலே வர லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.