Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச விரதமுறையும் பலனும்! பழநியில் தைப்பூச விழா கோலாகலம்: குவியும் பக்தர்கள்! பழநியில் தைப்பூச விழா கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி: கோயில் கருவறைக்குள் வரும் பாம்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
05:01

திருநெல்வேலி: நெல்லை அருகே இருந்து திருச்செந்தூர் முருகன்கோயிலுக்கு சர்ப்பக்காவடி எனப்படும் பாம்புக்காவடியை பக்தர்கள் எடுத்துச்சென்றனர்.

Default Image
Next News

தமிழகத்திலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் முருகக்கடவுளின் தலங்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவில், பாதயாத்திரையாக செல்வதும், அலகு குத்தி செல்வதும்,காவடிகள் எடுத்துச்செல்வதும்தான் பிரதானமானவையாகும். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி, தீர்த்தக் காவடி, அபிஷேகக் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி என பல்வேறு காவடிகளை தூக்குகின்றனர். இன்னொரு முக்கிய காவடி சர்ப்பக்காவடியாகும். நெல்லையை அடுத்துள்ள தெற்குகாரசேரி என்னும் கிராமத்தில் அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரநாதர் கோயிலில் இருந்து முருகபக்தர்கள் திருச்செந்தூர் முருகன்கோயிலுக்கு காவடிஎடுத்துச்சென்றனர். இதில் உச்சிமாகாளி என்னும் பக்தர், சர்ப்பக்காவடி  எடுத்துச்சென்றார்.

இதுகுறித்து அக்கோயில் பூஜாரி கணேசன் கூறுகையில், கடந்த இரண்டுஆண்டுகளாக இந்தகோயிலில் இருந்து சர்ப்பக்காவடி எனப்படும் பாம்பு காவடி எடுக்கப்படுகிறது. கோயிலில் சுவாமி கருவறையில் ஒரு கண்ணாடிப்பெட்டியை வைக்கின்றனர். அந்த பெட்டிக்குள் ஒரு நல்லபாம்பு தானாகவே வந்துஉட்கார்ந்துகொள்கிறது. இதனை பக்தர் உச்சிமாகாளி சுமந்துசெல்கிறார். தைப்பூசத்தன்று இதனை திருச்செந்தூர் கடற்கரையில் விட்டுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கருநாகப்பாம்பு கண்ணாடி பெட்டிக்குள் வந்து உட்கார்ந்தது.இந்த ஆண்டு வெள்ளை நாகப்பாம்பு வந்துள்ளது. வித்தியாசமான சர்ப்பக்காவடியை பார்க்க சிறுவர்,சிறுமியர் பெண்கள் என பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கூடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar