பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
சேலம்: சேலம் களரம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நேற்று நடந்த பால்குட ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். சேலம், களரம்பட்டி மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில், 88வது ஆண்டு விழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ம் தேதி அம்மனுக்கு கல்யாண உற்சவம் நடந்தது. 31ம் தேதி எலுமிச்சை அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது. தொடந்து நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் காலை, 10 மணிக்கு தேவி தியேட்டர் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து துவங்கியது. நூற்றுக்கணக்காண பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். கரளம்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் கோவிலை அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று இரவு கேரளா செண்டை மேளம் முழங்க, அம்மன் ஊர்வலம் நடத்தப்படுகிறது. நாளை காலை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதலை தொடந்து, மதியம், 3 மணிக்கு பூ மிதி திருவிழா நடக்கிறது. இரவு, 7 மணிக்கு சவுடேஸ்வரி அம்மன் ஊர்வலத்துடன் பக்தர்கள் அலகு குத்தி வருவர். 4ம் தேதி இரவு, 8 மணிக்கு அம்மன் சன்னிதானத்தில், திருவிளக்கு பூஜை நடக்கிறது. 5ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.