பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, ஆறகளூரில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் அருகே, ஆறகளூரில் உள்ள, காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், கால பைரவர் உள்பட, எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில், எட்டு பைவரர் சிலைக்கும், அபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. மாலை, 6 மணிக்கு, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சேலம், விழுப்புரம், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். * ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்யங்கரா தேவி கோவிலில், சிறப்பு அபி?ஷக பூஜைகள் நடந்தது. முன்னதாக, உலக நன்மை வேண்டி, யாக குண்டத்தில் வற்றல் மிளகாய், மூலிகைகள் கொட்டி சிறப்பு யாக பூஜை நடந்தது.