பதிவு செய்த நாள்
11
பிப்
2016
12:02
ஊட்டி: கிறிஸ்தவர்களின், தவக்காலம் நேற்று, சாம்பல் புதன் நிகழ்வுடன் துவங்கியது. கிறிஸ்தவ மத நம்பிக்கையில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழும் நிகழ்வை நினைவு கூறும் வகையில், தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது.
ஏசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள், அவரது சிலுவை மரணத்தை நினைவில் கொண்டு, ஒவ்வொருவரும் தாங்கள் செய்த பாவம், தவறுகளை நினைத்தும் மனம் வருந்துவது, மீண்டும் அத்தகைய தவறுகளை செய்யாமல் புது மனிதர்களாக வாழ்வது என்ற மையக் கருத்தை, தவக்காலம் உணர்த்துகிறது. இந்தாண்டின் தவக்காலம் நேற்று, சாம்பல் புதன் நிகழ்வுடன் துவங்கியது. தேவாலயங்களில், திருப்பலி நடத்தப்பட்டு, பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. தொடர்ச்சியாக, தேவாலயங்களில், பிரதி வெள்ளிக் கிழமைகளில், சிலுவைப் பாதை ஆராதனை நடக்கும். அடுத்த மாதம், 25ம் தேதி கிறிஸ்துவின் இறப்பு நாளை அனுசரிக்கும் புனித வெள்ளியும், 26ம் தேதி, கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாளும் கொண்டாடப்பட உள்ளது.