Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அண்ணாமலையார் கோவில் மாசி மக ... ஹயக்ரீவர் கோவிலில் குவியும் மாணவ, மாணவியர் கூட்டம்! ஹயக்ரீவர் கோவிலில் குவியும் மாணவ, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
10:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலைச் சுற்றி பருந்து வட்டமிட்டதால், பக்தர்கள் பருந்தை பார்த்து வணங்கினர். கோவை மாவட்டம், காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நள்ளிரவு கிராமசாந்தி பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

காலை, 10:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை, யாகசாலையில் வைத்து, தச தரிசனமும், சிறப்பு பூஜைகளும் செய்தனர். அர்ச்சகர்கள் கொடியை கோவிலின் உள்ளே ஊர்வலமாக எடுத்து வந்து, கொடி மரத்தின் அடியில் உள்ள, பெரியதிருவடி கருடாழ்வார் சிலையின் முன்பு வைத்தனர். காலை, 11:00 மணிக்கு, 33 அடி உயரமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது, அங்கிருந்த நுாற்றுக்கணக்கான தாசர்கள், சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் ’கோவிந்தா...ரங்கா’ என கோஷமிட்டனர். கோவிலின் மேலே வானத்தில், பருந்து ஒன்று வட்டமிட்டது. இதை பார்த்த பக்தர்கள், பருந்தை பார்த்து வணங்கினர். காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை, பறந்து சென்று பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில், கொடியில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, என்பது ஐதீகம்.

இவ்விழாவில், ராஜகோபுர திருப்பணி உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு அனுமந்த வாகனத்திலும், 19ல் கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 20ல் பெட்டத்தம்மன் அழைப்பும், 21ம் தேதி காலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்றிரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 22ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சுவாமி, தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 3:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 23ல் குதிரை வாகனத்தில் பாரிவேட்டையும், 24ல் சேஷவாகனத்தில் தெப்பத்திருவிழாவும், 25ல் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கைலாஷ், மேலாளர் ராமராஜ், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar