Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் ... கும்பகோண மகாமக தீர்த்தம்: தபாலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவில் திருவிழா போதிய வசதிகள் செய்து தர அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
12:02

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு, போதிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. வரும், 21ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் மயானப் பூஜை, 24ம் தேதி, காலை, 9:00 மணிக்கு மேல், குண்டம் இறங்குதல் நடக்கின்றன. விழா பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், சப்-கலெக்டர் காயத்ரி தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார் ஜெயசித்ரா, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி, டி.எஸ்.பி.,க்கள் முத்துராஜன், சார்லஸ் முன்னிலை வகித்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி கமிஷனர் கார்த்திக் விழா குறித்து பேசினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். உணவு கலப்படம் குறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா முடியும் வரை, மின்தடை, மின்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, மின்வாரிய அதிகாரிகள், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். கோவில் மற்றும் குண்டம் திருவிழா நடக்கும் பகுதிகள் துாய்மையாக இருக்க, ஆனைமலை மற்றும் அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். பாதுகாப்பு வசதிகளுக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு துறையினர், தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்களின் போக்குவரத்து வசதிக்கு, போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். உரிய இடங்களில், மின்விளக்குகள் பொருத்த வேண்டும். இரண்டு முதலுதவி மையம், இரண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar