பதிவு செய்த நாள்
22
பிப்
2016
12:02
திருப்பதி: திருமலையில் திருநாமம் சாற்றுதல், இன்று முதல் பல இடங்களில் துவங்க உள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க செல்லும் போது நெற்றியில், வைணவ சம்பிரதாயமான திருநாமம் சாற்றுவது வழக்கம். இதை வழக்கப்படுத்த, வைகுண்டம் காத்திருப்பு அறையின் பெரிய கண்ணாடி முன், ஐந்து கிண்ணங்களில் திருநாமம் மற்றும் அதை நெற்றியில் இட்டுக் கொள்வதற்கான குச்சியை, தேவஸ்தானம் ஏற்படுத்தியிருந்தது. இதை, பக்தர்கள் பலரும் பயன்படுத்தி வந்தனர். திருமலையில், பிப்., 14 ரத சப்தமியன்று, பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லும் வழியில் உள்ள பல விசாரணை மையங்களின் முன், தேவஸ்தானம் சார்பில் திருநாமம் சாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் திருமலையின் பல இடங்களில், திருநாமம் சாற்றுவதை இன்று முதல் நிரந்தமாக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.