பதிவு செய்த நாள்
22
பிப்
2016
02:02
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, வடபத்ரகாளியம்மன் மாசி திருவிழா, இன்று தொடங்கி
நான்கு நாட்கள் நடக்கிறது. இடங்கணசாலை கிராமம் மெய்யனூரில் உள்ளது வடபத்ரகாளியம்மன் கோவில். இங்கு, மாசி திருவிழா இன்று காலை, 10 மணிக்கு, அபிஷேகம், சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் திருவீதி உலாவுடன் கரகாட்டம், மயிலாட்டம் நடக்கிறது. சக்தி கரகம் எடுத்தல், பூமிதித்தல், உருளுதண்டம், கூழ்படைத்தல், அன்னதானம், கயிறு இழுக்கும் போட்டி, மஞ்சள் நீராட்டம் என, விழா தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கிறது.