திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று மகாமகத் தீர்த்தவாரி மற்றும் தெப்ப உற்சவம் நடந்தது.
மாசித்தெப்ப உற்சவம் பிப்.,13ல் துவங்கியது. நேற்று முன்தினம் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் தெப்ப மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளினார். பின், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. நேற்று அதிகாலை, பெருமாளுக்கு தங்கக் கருட சேவை, திருவீதி புறப்பாடு நடந்தது.காலை 6 மணிக்கு ஸ்ரீமகாமகக் கிணற்றில் சடாரிக்கு தீர்த்தவாரி நடந்தது. பின், கிணற்றின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.திருவீதி உலாவில் தங்கப்பல்லக்கில் தேவியருடன் சுவாமி தெப்ப மண்டபம் எழுந்தருளினார். மதியம் 1.30 மணிக்கு தெப்பத்தில் ஒரு முறை வலம் வந்தார். பின், மீண்டும் தெப்ப மண்டபம் எழுந்தருளல் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் உற்சவரை தரிசனம் செய்தனர்.
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், தெப்பக்குளக்கரையில் விளக்கேற்றினர். இன்று தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. வெயிலால் அவதிதெப்ப உற்சவத்திற்கு வந்த பக்தர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டனர். நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இலவசத் தரிசன வரிசைக்கும் நிழற்கூரை இல்லை. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் நிழல் தேடி அலைந்தது பரிதாபமாக இருந்தது.