சதுரகிரி மலைக்கு பக்தர்கள் ஆபத்து பயணம்: வனத்தில் ரூ.10 லட்சத்தில் தடுப்பு சுவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2016 11:02
விருதுநகர்: சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் கோயில் செல்லும் பக்தர்கள் ஆபத்தான வனப்பகுதி வழியாக செல்வதை தடுக்க, வனத்துறை சார்பில் தாணிப்பாறையில் ரூ.10 லட்சம் செலவில் 150 மீட்டருக்கு தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கியது.சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் மதுரை மாவட்டம் சாப்டூர் வனப்பகுதியிலும், கோயில் செல்லும் நுழைவு பகுதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியான தாணிப்பாறையிலும் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் வரும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயில் வழியாக கோயில் செல்வர். செங்குத்தான பாதைதை, ஆடி அமாவாசை காலங்களில் வரும் பக்தர்களில் சிலர் ரோட்டோர வனப்பகுதிகள் வழியாக செங்குத்தான மலை மீது ஏறி செல்கின்றனர். இவ்வாறு செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் புதிய வழியாக செல்லும் போது வன விலங்குகளும் பாதிப்பதோடு, வன விலங்குகளால் ஆபத்தும் ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க வனத்துறை சார்பில் தாணிப்பாறை வனப்பகுதியை சுற்றி ஏழு அடி உயரத்தில் 150 மீட்டருக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.