அங்காள பரமேஸ்வரி கோவில் 28ல் குண்டம் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2016 11:02
அன்னுார்: கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, 28ம் தேதி துவங்குகிறது. கஞ்சப்பள்ளியில், 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, 11ம் ஆண்டு குண்டம் திருவிழா வரும், 28ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவ ங்குகிறது. 29ம் தேதி குண்டம் இறங்குவோர் விரதம் துவக்குகின்றனர். மார்ச் 4 அதிகாலை, கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடக்கிறது. 7ம் தேதி மகா சிவராத்திரி திருவிழா, அம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கரகம், பூவோடு எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் நடக்கிறது. மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடத்தி, மேட்டுப் பாளையம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலையில், பேச்சியம்மன் பூஜை, படையல் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.