பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
திருப்பதி :திருமலையில், கோடை காலத்திற்கான முன்னேற்பாடுகளை செய்ய, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு, கோடைக்காலம் துவங்குவதற்கு முன், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. திருமலை யில், பகல் நேரத்தில், வெப்பத்தை தாங்க முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதனால், ஏழுமலையான் கோவில் முன்புறம்; மாடவீதியை சுற்றியுள்ள பகுதிகளில், நிழல்பந்தல் அமைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.என்னென்ன வசதிகள்?*திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், ராம்பகிஜா விருந்தினர் மாளிகை பேருந்து நிலையம், கோவிந்த நிலையம் விருந்தினர் மாளிகை, அலிபிரி சோதனை சாவடி, உள்ளிட்ட இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் வைக்க உள்ளனர்.*மாட வீதியின் ஓரங்களில், கூலிங் பெயின்ட் அடிக்கவும், ஈரமாக்கப்பட்ட கம்பளங்கள் விரிக்கவும் உள்ளனர்.*திருமலைக்கு செல்லும், இரண்டா வது மலைபாதை; பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
*ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்லும் வரிசையில், பக்தர்களுக்கு சாம்பார் சாதம், பொங்கல், உப்புமா, பிசிபேளாபாத் வழங்கப்படுகிறது. அவை சூடாக இருப்பதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், தரிசன வரிசையில் பிரசாதம் உண்ட பின், கை கழுவ வசதி இல்லை. அதனால், பிரசாதத்துடன், பயன்படுத்திய பின் துாக்கி எறிய கூடிய, சிறு கரண்டிகளை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பணிகள், ஏப்ரல், முதல் வாரத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.