பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
திருவாரூர்: குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர உற்சவம் இன்று துவங்குகிறது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்து உள்ளது, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில். இக்கோவி லில், வருடாந்திர உற்சவம், இன்று மதியம், 3:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது.மாலை, 6:15 மணிக்கு, மூலவருக்கு சாயரட்சை பூஜை, இரவு, 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.மறுநாள், 26ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9:30 மணிக்கு மகா அபிஷேகம், 27ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.