கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு விஷேச திருமஞ்சனம் நடந்தது. உற்சவர் கல்யாண ஜெகந்நாதப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுடன், நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல் பாடப்பட்டது. இரவு 7 மணிக்கு கருடவாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பேஷ்கார் கண்ணன் செய்தார்.