Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கருக்களாச்சேரி கோவிலில் அதிகாலை ... பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை திறக்கக் கூடாது: மன்னர் குடும்பத்தினர் மனு! பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மகர ஜோதி உற்சவத்திற்கு முன்னதாக பக்தர்களுக்கு வசதிகள் செய்ய உத்தரவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2011
10:08

பீர்மேடு: மகர ஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்னரே, தமிழக - கேரள எல்லையில் உள்ள இரு ஊராட்சிகளில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, புல்மேடு துயர சம்பவம் பற்றி விசாரிக்கும் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கேரளா பத்தனம் திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்தாண்டு ஜனவரி 14ம் தேதி, ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள், தமிழக - கேரள எல்லை அருகே, புல்மேடு பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கினர். இச்சம்பவத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த, 104 பக்தர்கள் பலியாயினர். இந்தத் துயர சம்பவம் குறித்து, நீதிபதி ஹரிஹரன் நாயர் தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. இக்கமிஷன் தற்போது, புல்மேடு அருகே உள்ள பல கிராமங்களுக்கு, நேரில் சென்று விசாரணை நடத்துகிறது. நேற்று முன்தினம், தமிழக - கேரள எல்லையையொட்டிய பருந்துப்பாறா மற்றும் பாஞ்சாலி மேடு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது.இவ்விரு கிராமங்களிலும் அய்யப்ப பக்தர்கள் தங்குவது வழக்கம். இங்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என, கமிஷன் கண்டறிந்தது. இதையடுத்து, இரு ஊராட்சிகளிலும் சபரிமலை பக்தர்களுக்காக, அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, இரவு நேரத்திலும் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும். இவற்றை எல்லாம், மகரஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்பாகவே செய்து தர வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை இரு ஊராட்சிகளும் உடனே மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டது. இதற்காக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, வருவாய் துறை, அய்யப்ப சேவா சங்கம் ஆகியவற்றின் உதவிகளை பெறலாம் என்றும் தெரிவித்தது. மேலும், கிராம மக்களிடம் நீதிபதி பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar