Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முத்தணம்பாளையத்தில் 7ல் சிவராத்திரி ... குமாரபாளையம் காளியம்மன் கோவில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் பக்தர்கள் எதிர்பார்ப்பு பங்குனி உத்திர திருவிழாவில் உற்சவர் சிலை எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2016
11:03

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சுவாமி வீதி உலாவின் போது, பழைய சிலை பயன்படுத்தப்படுமா அல்லது புதிய சிலை பயன்படுத்தப்படுமா என்ற குழப்பம், பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம், இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை.

காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பழமையானது. பல்லவன். சோழன், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அதிகம் வருவர். பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும், 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி, சோமாஸ்கந்தர் ஆகிய மூவரும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்கும் சிலை தான், கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களுக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். பல நுாறு ஆண்டுகளாக இந்த சிலை தான், உற்சவத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால் இந்த சிலை சற்று சேதம் அடைந்து, பீடத்தின் அடிப்பாகம் விரிசல் கண்டுள்ளது. எனவே, அதற்கு பதிலாக, புதிய உற்சவர் சிலை செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு, கோவில் உபயதாரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவின் படி, புதிய சிலை செய்யும் பணி நடப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், வரும் 13ல், பங்குனி உத்திர திருவிழா நடக்க இருக்கிறது. இந்த உற்சவத்தில், தற்போது இருக்கும் உற்சவர் சிலையே பயன்படுத்தப்படுமா? அல்லது புதிய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல நுாறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் அந்த சிலை தான், காஞ்சி மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்நிலையில், புதிய சிலை தயாரிக்கப்படுவதாக கூறப்படுவதால், எந்த சிலை பயன்படுத்தப்படும் என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஆனால், அறநிலையத் துறையோ, அதுகுறித்து உறுதியான எந்த தகவலும் தெரிவிக்காமல் உள்ளது. பங்குனி உற்சவத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதில், எந்த உற்சவர் சிலை வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் என, இன்னும் முடிவு செய்யப்பட வில்லை; கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

- பரணிகுமார் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar