Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்யாண உற்சவம்உங்கள் ஊரிலும் நடத்த ... பரமக்குடி முத்தாலம்மன் பங்குனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் இன்று சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
12:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி கோவில்களில் இன்று மகாசிவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், இன்று இரவு, 7:30 மணிக்கு அனுக்கிரஹ, விக்னேஸ்வர, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், ஏகாதச ருத்ர ேஹாமம் நடைபெறும். இரவு, 9:00 மணிக்கு அன்னதானம், 10:00 மணிக்கு முதற்கால அபிேஷகம், 11:30 மணிக்கு கரப்பாடி இளைஞரணி வழங்கும் தேவராட்டம், நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், 1:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், 4:00 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் சுப்ரபாதம் நடக்கிறது.

பாலக்காடு மாவட்டம், கோவிந்தாபுரத்திலுள்ள குபேர லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு திருமூர்த்தி மலை தீர்த்தத்துக்கு புறப்படுதல், மாலை, 5:00 மணிக்கு தீர்த்த குட  ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 11:00 மணிக்கு அன்னதானம், இரவு, 9:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 10:00 மணிக்கு சிவராத்திரி பூஜை கள் இடம் பெறுகின்றன. பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு பின்புறம், முத்துகுமாரசாமி லே-அவுட், ஜீவமுக்தி சிவாலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 10:00 மணிக்கு கொடியேற்றம், மாலை 4:00 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தன. இன்று இரவு, 8:00 மணிக்கு முதற்கால பூஜை, 9:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு கூட்டு வழிபாடு, 3:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:00 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

சிங்காநல்லூர் பாலாற்றங்கரை சித்தாண்டீஸ்வரர் கோவிலில் இன்று மதியம், 12:00 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவில் தீர்த்தத்துக்கு செல்லுதல், மாலை, 5:00 மணிக்கு கோவிலுக்கு தீர்த்தம் வந்தடைதல், இரவு, 8:00 மணிக்கு சிக்காட்டம், 9:00 மணிக்கு முதற்கால அபிேஷகம், 10:00 மணிக்கு குழந்தைகள் நடன நிகழ்ச்சி, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம் இடம்பெறுகின்றன. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், 4:00 மணிக்கு மகா கணபதி, நவக்கிரக ேஹாமம், 5:00 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், 6:00 மணிக்கு பள்ளய பூஜை, 8:00 மணி முதல் அன்னதானம், 10:30 மணிக்கு மகா அபிேஷகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

வடுகபாளையம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில், இன்று காலை, 5:20 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு புண்ணிய தீர்த்தம் எடுக்க செல்லுதல், மாலை, 6:30 மணிக்கு புண்ணிய தீர்த்தம் அம்மனுக்கு செலுத்துதல், இரவு 7:00 மணிக்கு சிவனுக்கு மகா அபிேஷகம், 9:00 மணிக்கு அம்மனுக்கு திருவாபரணம் எடுத்து வருதல், 9:30 மணிக்கு படி பூஜை, 10:30 மணிக்கு மயான பூஜை, சக்தி கும்பம் அழைத்தல் நடைபெறுகிறது. நாளை காலை, 8:00 மணிக்கு பள்ளய பூஜை, 10:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:00 மணி க்கு பூவோடு எடுத்தல், 9ம் தேதி காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மகா அபிேஷகம் நடைபெறும்.

கிணத்துக்கடவு வடசித்தூர் பிளேக் மாரியம்மன் கோவிலில், இன்று காலை, 8:30 மணிக்கு மகா கணபதி பூஜை, 9:00 மணி க்கு அம்மன் பூஜை, நாம ஜெபம், இரவு, 8:30 மணிக்கு 108 தீர்த்தக்குட பூஜை, திருவிளக்கு பூஜை, அன்னதானம், இரவு, 11:00 மணிக்கு சிறப்பு இசை நிகழ்ச்சி, நாளை காலை, 5:30 மணிக்கு பலாபிேஷகம் நடைபெறும்.

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், சிவன் ராத்திரி திருவிழா இன்று நடக்கிறது. இக்கோவிலில், இத்திருவிழா கடந்த முதல் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. பின், வேலுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று படி விளையாட்டு நேற்று வரை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு பால் பூஜையும், அலங்கார பூஜையும், காலை, 8:00 மணியளவில் செண்டாமரம் கொண்டு வந்து ஸ்தாபனம் செய்தலும், மாலை, 6:00 மணிக்கு பால் பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கின்றன. இரவு, 9:00 மணிக்கு மாமாங்கம் ஆற்றுக்கு புறப்படுதல், இரவு, 11.00 மணிக்கு ஆற்றில் இருந்து சக்தி வேல், சக்தி கரகத்தோடு சுவாமி திருவீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறது. நாளை, பகல், 12:00 மணியளவில் மகா அபிசேகத்துடன் சிவன்ராத்திரி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பூசாரி, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar