திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை விழா நடந்தது. விழாவையொட்டி காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏர்க்கரைமூலையில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, கஞ்சுளி கபாளம் கையில் ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 12:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் விதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.