தோகைமலை: கரூர் மாவட்டம், தோகைமலை சின்னரெட்டியபட்டி குன்னுடையார் மலையில் உள்ள ஆவுடையலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆவுடையலிங்கேஸ்வரர் மலையை சுற்றி பக்தர்கள் உற்சாகத்துடன் பல்வேறு சிவன் பாடல்களை பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.