Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ... பெரியரெட்டியபட்டியில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
எழுத்தின் அளவு:
சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

பதிவு செய்த நாள்

30 மார்
2016
04:03

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் உள்ள சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சனி கோயிலுக்குள் நுழைவதற்கு கோயில் நிர்வாகமும், மகாராஷ்டிர அரசும் தடை விதித்திருந்தன. இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. தடையை நீக்க வலியுறுத்தி மும்பை கோர்ட்டில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், பெண்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிப்பது சட்ட விரோதமானதுடன், குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. அதுமட்டுமின்றி இது போன்ற தடைகள் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக் கூடியவை என குறிப்பிடப்பட்டது. சுமார் கால் நூற்றாண்டுகளாக சனி கோயிலில் நுழைய தடை இருந்து வருகிறது. இதனை எதிர்த்து ஜனவரி 26ம் தேதி சனி கோயிலுக்குள் நுழைய 400 மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயன்றனர். அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து கோர்ட் வரை சென்றது.

இன்று இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் பி.எச்.பாட்டீல், ஏ.ஏ. சயீத் கூறியது, சனி கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு மட்டும் தடை விதிக்க முடியாது. ஆண்கள் செல்லும் போது, ஏன் பெண்கள் மட்டும் செல்ல தடை விதிக்க வேண்டும். ஆண்கள் செல்லும் கோயில்களுக்குள் பெண்கள் செல்ல கூடாது என எந்த சட்டமும் இல்லை. கோயிலில் நுழைய பெண்களுக்கு உரிமை உண்டு. அப்படி நுழையும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெண்களுக்கு அனுமதியில்லை என எந்த சட்டமும் இதுவரை இல்லை. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar