கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 12:04
ரெட்டியார்சத்திரம்:கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு , விசேஷ அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் நடந்தது. ஏகாந்த சேவையுடன் பூஜைகள் நடந்தது. அனுக்ரக பைரவருக்கு, சந்தனம், பால், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் அஷ்டமி பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.