Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தெலுங்கு புத்தாண்டு: ... திருமலையில் ’யுகாதி’ ஆஸ்தானம் துவங்கியது ’துர்முகி’ ஆண்டு! திருமலையில் ’யுகாதி’ ஆஸ்தானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்!

பதிவு செய்த நாள்

08 ஏப்
2016
04:04

மயிலாடுதுறை:  நாகை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கிணையான 6 கோயில்களில் முதன்மையானதாகும். இங்கு சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தியாக தனி சன்னதிக்கொண்டு விளங்கி வருகிறார். நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் இந்த  கோயில் ஆதி சிதம்பரம் என அழைக்கபடுகிறது. மேலும் இங்குள்ள சந்திரன், அக்னி  மற்றும் சூரியன் உள்ளிட்ட முக்குளங்களில் நீராடி சாமியை வணங்கினால் எல்லா அருளையும் பெறலா ம் என்பது ஜதீகம். மேலும்  பிரம்ம வித்யாம்பாள் அம்மனை வழிபட்டால் கல்வி, அறிவு உள்ளிட்ட பல்வேறு நற்பலன் கிடைக்கும்.  

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற 11ம்தேதி காலை 10மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி கோயிலின் வளாகத்தில் அமைக்கபட்டுள்ள யாக சாலையில் சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பாள், அகோரமூர்த்தி, நடராஜர், புதன் உள்ளிட்டசாமிகளுக்கும் மற்ற பரிவார சாமிகளுக்கும்  என 125 யாக குண்டங்கள் அமைக்கபட்டுள்ளன. இதில் முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில்  108 வகையான ஷோமப்பொருட்கள், பழங்கள், உள்ளிட்ட பொருட்கள் போடப்பட்டது.  மேலும் மகாபூர்ணாகுதியும் தீபாரதனையும் காட்டபட்டது. நேற்று கா லை இராண்டாம் கால யாக பூஜையும், மாலை முன்றாம் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை நான்காம் காலம், மாலை ஜந்தாம் கால யாக பூஜையும்  நடை பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகையன், மேலாளர் கண்ணன், பேஸ்கார் திருஞானம்,  தலைமை அர்ச்சகர் கந்தசாமிக்குருக்கள், சர்வசாதக குரு க்கள் வினோத்குருக்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar