மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முன், யாகசாலை அமைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், அம்மன், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.