பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
11:04
சூலுார் : சூலுார் பெரிய மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா வரும், 20ம் தேதி நடக்கிறது. சூலுார் பெரிய மாரியம்மன் கோவில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில். இங்கு கடந்த, 5ம்தேதி இரவு, 10:00 மணிக்கு சாமி சாட்டுதல் பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று இரவு அக்னி கம்பம் நடுதல் வைபவம் நடந்தது. வரும், 19ம்தேதி பண்டார வேஷமம், அம்மை அழைத்தல் நடக்கவுள்ளது. 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் ஆற்றில் அழைத்து வந்து அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. பெண்கள் தீர்த்தக்குடம், பால் குடம் எடுக்கின்றனர். மாலை, 6:00 மணிக்கு திருவிழா நடக்கிறது. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மகா முனி பூஜையுடன் வரும், 26ம்தேதி விழா நிறைவு பெறுகிறது.