Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காவல் தெய்வத்துக்கு தேர்த்திருவிழா ... தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
12:04

திருத்தணி; தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் முதல் நாளையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலமும் சிறப்பு தரிசனமும் நேற்று நடந்தன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதம் முதல் நாளையொட்டி, காலை 9:00 மணிக்கு, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் தொடங்கியது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி, அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு 1,008 பால்குட ஊர்வலத்தை துவக்கிவைத்தனர்.

ஊர்வலம், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, பெரிய தெரு, ஜோதிசாமி தெரு வழியாக, மலைக் கோவிலில் உள்ள, காவடி மண்டபத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், தங்கரதத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.முன்னதாக, சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, காலை 9:30 மணிக்கு, சிம்ம வாகனத்திலும், இரவு 7:00 மணிக்கு, ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் உற்சவ பெருமான் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், முருகன் துணை கோவிலான மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, 23ம் ஆண்டு 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar