செஞ்சி: செஞ்சி பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. செஞ்சி செல்விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அ பிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். வெங்கட்ரமணருக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்தனர். நல்லாண்பிள்ளைபெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப விழா நடந்தது. பக்த ஆஞ்ச நேயருக்கு திருமஞ்சனமும், சந்தனக் காப்பு அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரு ுமாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடந்தது. மாலை லட்ச தீபம் ஏற்றப்பட்டது.