தென்கரை: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன், திருமூலநாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 10.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வலம் வர, வெள்ளி சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளினர்.