பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
12:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 21 நாட்களில், 63.11 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். மேலும், காணிக்கையாக உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை பக்தர்கள் செலுத்துகின்றனர்.அந்த வகையில், 21 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில், 63,11,095 ரூபாய் ரொக்கம், 344 கிராம் தங்கம், 2,430 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.