பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
11:04
கனகம்மாசத்திரம் : கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருத்தணி அடுத்த, கனகம்மாசத்திரம் பஜாரில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 6:30 மணிக்கு, சுமங்கலி, வடுக, கன்யா, தம்பதி பூஜைகள் நடந்தன.காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை, 6:30க்கு மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.