பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
11:04
திருத்தணி: அகூர் கிராமத்திற்கு, ஆண்டிற்கு ஒரு முறை, திருத்தணி முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து அருள்பாலிப்பார். அந்த வகையில், நேற்று காலை, மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக மேல்திருத்தணிக்கு வந்தடைந்தார். பின், மேல்திருத்தணி, மேல்கசவராஜபேட்டை, முருகூர் வழியாக, மாலை 4:00 மணிக்கு, அகூர் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றடைந்தார். பின், இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், அகூர் கிராம வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.