பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
12:04
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூர் அப்பர் கோவிலில் குரு பூஜை விழா வரும் 30ம் தேதி துவங்குகிறது. பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் பிறந்த வீடு தற்போது கோவிலாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் குருபூஜை விழா நடக்கிறது. இந்த ஆண்டு வரும் 30ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதி வரை மூன்று நாட்கள் வரை நடக்கிறது. முதல் நாளான 30ம் தேதி காலை 6:00 சிவபூஜை, 8:00 மணிக்கு மங்கல இசை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாசாரிய சுவாமிகள் அருளாசி, 12:30 மணிக்கு தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு மங்கல இசை, 5:00 மணிக்கு திருமுறை இசை, 6:00 மணிக்கு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் பேசுகிறார். வரும் 1ம் தேதி காலை சிவபூஜையுடன் துவங்கும் விழாவில் வேலுார் தேவஸ்தானம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், வடலுார் ஊரன் அடிகளார் சிறப்புரை, மாலை 6:00 மணிக்கு சிதம்பரம் ஸ்ரீமத் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் பேசுகிறார். மாயவரம் தமிழ்துறைத் தலைவர் சாமிகிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து பட்டிமன்றம் நடக்கிறது. 2ம் தேதி காலை 6:00 மணிக்கு சிவபூஜை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசை, 12:00 மணிக்கு தருமபுரி ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் அருளாசியும், தருமபுரி 26வது குருமகா சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசியும், இரவு 9:00 மணிக்கு அப்பர் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.