பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
12:04
ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில், சித்திரை சதய தேர் விழா துவங்கியுள்ளது. ஈரோடு டி.வி.எஸ்., வீதியில் மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று சுவாமி, அம்பாள், அப்பரடிகள் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு சுவாமிகள் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வரும், 2ம் தேதி, காலை, 10 மணிக்கு தேர் விழா, மாலையில் அப்பரடிகள் ஆராதனை விழா நடக்கிறது. இதை தொடர்ந்து, 6ம் தேதி 63 நாயன்மார்களையும் பல்லக்குகளில் அமர்த்தி பெண்கள், தோளில் சுமந்து வீதி உலா வருவர். விழாவையொட்டி, 6ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, மாலையில் சுவாமி வீதி உலா நடக்கிறது. மாலை வேளைகளில் சைவ சமய சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருமுறை கழகம் செய்து வருகிறது.