Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோயிலில் மழை பெய்ய ... ஸ்ரீரங்கம் சென்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சீர்! ஸ்ரீரங்கம் சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் 28ம் தேதி வரை தாராபிஷேகம்!
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் 28ம் தேதி வரை தாராபிஷேகம்!

பதிவு செய்த நாள்

04 மே
2016
11:05

வேலுார்: சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயில் இன்று துவங்குகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று முதல், 28ம் தேதி வரை தாராபிஷேகம் நடக்கிறது.கோடை வெயிலின் பாதிப்பு, இதுவரை எப்போதும் இல்லாத அளவில், இந்த ஆண்டு மிக கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், 110 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தொட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையின் சமநிலையற்ற தன்மையால், எதிர்பாராத நேரத்தில் மிக கடுமையான மழையும், கோடையில் மிக அதிகமான வெப்பமும் ஏற்பட்டுள்ளது.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கும் முன்பே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சம், 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்தது.எனவே, அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம், மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

எதிர்பாராத நிலையில் கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே, வெயில் பாதிப்பில் இருந்து தப்ப முடியும். கத்திரி வெயிலின் துவக்கத்தில் அதிக வெயிலும், பின், அக்னி நட்சத்திர கடைசி நாட்களில், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருக்கும். இந்நிலையில், அக்னி நட்சத்திர வெயிலை முன்னிட்டு, இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்தியாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று முதல், வரும் 28ம் தேதி வரை, தாராபிஷேகம் நடக்கிறது.இதையொட்டி, தினமும் காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, சுவாமி சன்னிதி கருவறையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கோவிலில் தாராபிஷேகம் நடைபெறுவதால், வழக்கமான வழிபாடுகளில், தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது, கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால், அக்னி நட்சத்திரம் நிறைவாக நடத்தப்படும் யாகம், இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar