சிவபெருமானிடம் திருமூலருக்கு அளவுகடந்த அன்பு. அந்த அன்பு மேன்மேலும் அதிகமாகி, தான் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் போகிறது அவருக்கு. சிவபெருமானையே கடித்துத் தின்றுவிடுவேன், அரிவாள்மணையில் வைத்து நறுக்கிவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்.
அன்புள் உருகி அழுவன், அரற்றுவன்; என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்; என் பொன்மணியை, இறைவனை, ஈசனை தின்பன், கடிப்பன், திருத்துவன் தானே! (திருத்துவன்-அரிவாள்மணையில் வைத்து நறுக்குவேன்)