பதிவு செய்த நாள்
07
மே
2016
11:05
பண்ருட்டி: திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் நேற்று அருள்பாலித்தார். சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு, நித்தியபடி பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் பெருமாள் பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு, உச்சிக்கால பூஜை, மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு, சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.