பதிவு செய்த நாள்
07
மே
2016
11:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இக்கோவிலில், அமாவாசையையொட்டி அபி?ஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுபோன்று, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், சுப்ரமணியசுவாமி கோவில், ஐயப்பன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதுபோன்று, அம்பராம்பாளையம் ஆற்றில், பலர் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.