Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி மாரியம்மனுக்கு தங்க கவசம் ... மே 19ல் திருவாதவூர் திருக்கல்யாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா மே 26ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா மே 26ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

07 மே
2016
12:05

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, 10 ஆண்டுகளுக்கு பின் வரும், 26ம் தேதி தேர்வடம் பிடித்தலுடன் கோலாகலமாக துவங்குகிறது.   பொள்ளாச்சியின் வடக்கு பகுதியில் உள்ளது புகழ்பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில். கோவை மாவட்டம் மட்டுமன்றி, கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மன் அருள் பெற்றுச்செல்கின்றனர். இச்சூழலில், கோவில் திருப்பணிகள் நடக்காததால், கும்பாபி ? ஷகம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதனால்,பொதுமக்கள் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தியே ஆக வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்தே, அற நிலையத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கியது. முதல் திருப்பணியாக பழைய திருத்தேர் புதுப்பிக்கும் பணி துவங்கியது. அங்கு, 27 லட்சம் ரூபாய் செலவில் கும்பகோணத்தை சேர்ந்த சிற்பிகள் தேர் திருப்பணியை செய்து முடித்தனர். இரு மாதங்களுக்கு முன் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலைச் சுற்றி தேர்வலம் நடத்தப்பட்டது. கோவில் அதிகாரிகளும் ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர். சமீபத்தில், 48 நாள் மண்டல பூஜைகள் முடிவுக்கு வந்தன. ஏற்கனவே முடிவு செய்தது போல, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வரும், மே 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இம்மூன்று நாட்களும் தேர்வடம் பிடிக்கப்படுகிறது.  முன்னதாக, வரும் 9ம் தேதி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதையடுத்து, 10ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கிராமசாந்தி, பூவோடு எடுத்தலும், 25ம் தேதி மாவிளக்கு பூஜையும், அன்றே பொங்கலிடுதலும் நடக்கிறது. தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து, வரும், 29ம்தேதி மகாஅபிஷேகமும் நடக்கிறது. சூலக்கல் மாரியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு, இப்போதே ஜமீனுக்கு உட்பட்ட 9 கிராமங்களும், ஜமீனுக்கு உட்படாத 9 கிராமங்கள் என, 18 கிராமங்களும் களைகட்ட துவங்கியுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar