மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளதாவது: திருவாதவூர் திருமறைநாதசுவாமி கோயிலின் வைகாசி பிரமோற்சவம் மே 11 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, மே 16ல் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மேலு?ருக்கு எழுந்தருளல், 19ல் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம், 20ல் திருத்தேர் உலா உற்சவம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன என தெரிவித்துள்ளார்.