சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல், வெயிலின் தாக்கம் குறைய, கோவிலில் சிறப்பு பூஜை நடந்து வந்தது. அடிக்கடி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளதால், வெயிலின் தாக்கத்தை குறைத்த எம்பெருமான் அழகிரி நாத சுவாமிக்கு இதிகாச புராணங்கள் ஓத சிறப்பு பூஜை, நாளை நடக்கிறது.