Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி திருத்தேர் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
10:09

வேதாரண்யம்: உலக பிரசித்திப்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்களாக நடந்து வருகிறது.விழா நாட்களில் கோவிலில் தமிழில் திருப்பலியும், கீழ் கோவிலில் தினமும் தமிழ், மராட்டி, ஆங்கிலம், கொங்கனி, இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்து வருகிறது.விழா நாட்களில் மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றமும், மாலை ஆறு மணியளவில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுறை, திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியனவும், நேற்றிரவு புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தேர் பவனியும் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர் பவனி நேற்று இரவு நடந்தது.இதையொட்டி மாலை ஐந்து மணியளவில் கோவில் கலையரங்கில தமிழில் ஜெபமாலை மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடந்தது.தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. இரவு ஏழரை மணியளவில் அன்னையில் திருத்தேர் பவனி நடந்தது.இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.இன்று எட்டாம் தேதி காலை புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலையில் விழாவின் நிறைவாக மாதாவின் திருக்கொடி இறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி கோவில் அதிபர் மைக்கேல், பங்குத்தந்தை மற்றும் துணை அதிபர் ஆரோக்கிய தாஸ், பொருளாளர் தர்சீஸ் ராஜ் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை மாவட்ட எஸ்.பி., ராமர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar